வியாழன், 20 ஜூன், 2013

தாந்தாமலை ஶ்ரீ முருகன் அன்னதான சபையினதும், அரசடித்தீவு ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தினதும் திருப்பணிக்காக நீர்க்கொள்கலன் அன்பளிப்பு

தாந்தாமலை ஶ்ரீ முருகன் அன்னதான சபையினதும், அரசடித்தீவு ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தினதும் திருப்பணிக்காக திரு.திருமதி வைரமுத்து சின்னம்மா அவர்களின் புதல்வர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட                  நீர்க்கொள்கலன் (வவுஷர்)   19.06.2013 திகதி மாலை 7.00 மணியளவில்
விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் வைத்து  ஶ்ரீ தாந்தாமலை அன்னதான சபை நிருவாகிகளிடமும் அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலய தலைவரிடமும்  திரு.திருமதி வைரமுத்து சின்னம்மா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
        இந் நிகழ்வில் தாந்தாமலை அன்னதான சபை தலைவர் செ.குருகுலசிங்கம் அவர்கள் கூறியதாவது  நீர் கொள் கலனை அன்பளிப்பு செய்தவர்களுக்கு தாந்தாமலை ஶ்ரீ முருகன்,  அரசடித்தீவு ஶ்ரீ விக்னேஸ்வர பெருமானும் ஆசீர் வதிக்கவேண்டும் என்றும் நீர் கொள் கலனை (வவுஷர்) அனைவரும் உரிய முறையில் பராமரித்து அடியார்களுக்கு பயன்பெற உதவவேண்டுமெனவும்  கூறினார். இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அன்பளிப்பு செய்தவர்களுக்கு மேலும் மேலும் வாழ்த்தி நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.தியாகராஜா , பொருளாளர் சி.வாலசேகரம் தாந்தாமலை அன்னதான சபை தலைவர் செ.குருகுலசிங்கம்,செயலாளர் இ.றவேந்திரன், பொருளாளர் மு.குணேசலிங்கம் , விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ திருமேனிப்பிள்ளை,மற்றும்   க.சிவநேசன் கு.தேவராசா அன்னதான சபை உறுப்பினர்கள் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக