ஞாயிறு, 14 ஜூலை, 2013

கொக்கட்டிச்சோலையில் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பபட்டுள்ளது.

(ஜெய்) மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் பிரிவில் கொக்கட்டிச்சோலையில் இன்று 14.07.2013 முற்பகல் 9.00 மணியளவில் வயல்தரையில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பட்டிப்பளை பொலி ஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டது. ஒரு நாள் நிரம்பிய
பெண்  சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.   மஞ்சள் நிற உரப் பையினால் சுற்றப்பட்டு வயல்தரையில வீசி எறியப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பட்டிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணை களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக