ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 39வது அகில இலங்கை தேசிய விளையாட்டுப்போட்டி-2013

39வது அகில இலங்கை தேசிய விளையாட்டின் முதற்கட்டமான பிரதேச விளையாட்டு விழாவின் மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கழகங்கள் பங்குகொள்ளும் குழு விளையாட்டுக்களின் அடிப்படையில் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழக
மைதானத்தில் ஆண்களுக்கான கபடி, பெண்களுக்கான கபடி, வலைப்பந்து ஆகிய போட்டிகள் இடம்பெற்றன.ஆண்களுக்கான கபடி போட்டியில் 11 கழகங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தன. 
          
          இதில் இறுதிப்போட்டியாக அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும் அம்பிளாந்துறை கதிரவன் அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இறுதிவரை இரு அணியினரும் போட்டிபோட்டு இறுதியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் அம்பிளாந்துறை கதிரவன் அணியினரை 44 ற்கு 15 என்ற புள்ளி அடிப்படையில் தோற்கடித்து அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் 2013ம் ஆண்டின் கபடி சம்பியன் ஆக தெரிவுசெய்யப்பட்டனர்.
                    
               பெண்களுக்கான கபடி போட்டியானது  கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினருக்கும் கடுக்காமுனை ஆதவன் அணியினருக்கும் இடையில் இறுதிப்போட்டியாக நடைபெற்றது. இதில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பெண்கள் அணியினர் சம்பியனாக தெரிவாகினர்.
                 
              தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான வலைப்பந்து போட்டியானது அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினருக்கும் இடையில் இறுதிப்போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரை தோற்கடித்து அரசடித்தீவு விக்னேஸ்வரா மகளிர் அணியினர் 2013ம் ஆண்டின் வலைப்பந்து சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டனர்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக