ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மட்டக்களப்பு பண்டாரியாவெளிக் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

பட்டிப்பளைப் பிரதேச கலை, இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமும் இலங்கை செஞ் சிலுவைச் சங்கத்தின் பட்டிப்பளைக் கிளையினரும் இணைந்து 23.02.2013 நேற்று சனிக்கிழமை பண்டாரியாவெளிக் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டினை
முன்னெடுத்தனர். கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மேற்படி கிராமத்தில் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினரின் அனுமதியுடன் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் தம்பிப்பிள்ளை மேகராசா தெரிவித்தார். இந்நிகழ்வில் 45 பேர் பங்கு பற்றினர். இதன்போது டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டதுடன், அவ்விடங்களில் குறித்த சூழலில் வசிக்கின்றவா்களின் பங்குபற்றுதலும் பெறப்பட்டு துப்பரவு நடவடிக்கைகளும் செய்யப்பட்டன. தகரப்பேணிகள், பிளாஸ்ரிக் போத்தல்கள், டயர்கள், சிரட்டைகள் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவை அகற்றப்பட்டதாகவும் இந்நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பை அழிப்போம் என்னும் துண்டுப் பிரசுரமும் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச செயலகம் சார்பாக பண்டாரியாவெளிக் கிராம சேவைப் பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் சி.ஜீவிதன், சமூர்த்தி உத்தியோகத்தர் எஸ்.உமாபதிசிவம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக