சனி, 30 ஜூன், 2012

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்


* ஆரம்பம்
* பாடசாலையின் மகுடவாசகம்
* உருவாக்கமும், வரலாற்று பின்னணியும்
* தற்போதைய நிலை
* பாடசாலையின் அபிவிருத்திகளும்,         
   சிறப்பம்சங்களும் 
* பாடசாலைக் கீதம்



ஆரம்பம்

இப்பாடசாலை ஜீன் 1, 1910 இல் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் 12 மாணவர்கள் இப்பாடசாலையில் இருந்தனர்.


பாடசாலையின் மகுடவாசகம்

ஒழுக்கமுடன் உயர் கல்வி பெறுவோம்


உருவாக்கமும், வரலாற்று பின்னணியும்

கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுவோருக்கு முன்னுரிமை வழங்கும் நோக்குடன் இப்பாடசாலை தொடங்கப்பட்டது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 1910ம் ஆண்டில் கொப்பரசு சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இப்பாடசாலைக்கு ஆரம்பத்தில் மட்/அரசத்தீவு உரோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலை எனப்பெயர் வைத்தனர். 1923ம் ஆண்டு காலப்பகுதியில் இப்பாடசாலையில் இரண்டு வகுப்புக்கள் மாத்திரம் காணப்பட்டது. 1978ல் மட்/அரசத்தீவு கனிஸ்ட வித்தியாலயம் எனவும், 1980ம் ஆண்டில் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் எனவும், 1990ம் ஆண்டு மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாயமாகவும் பெயர் மாற்றப்பட்டது.


தற்போதைய நிலை

இப்பாடசாலையில் தற்போது 778 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மொத்தமாக 32 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். தற்போதைய அதிபராக வீ. கோபாலப்பிள்ளை பணியாற்றி வருகின்றார்.

பாடசாலையின் அபிவிருத்திகளும், சிறப்பம்சங்களும்

இப்பாடசாலை ஆரம்பத்தில் உரோமன் கத்தோலிக்கப் பாடசாலையாக இருந்த பின்னரே மட்அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்யாலயமாக பெயர் மாற்றப்பட்டு தரம் உயர்த்ப்பட்டது.

இப் பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டம், மாகாணமட்டம் போட்டிகளிலும் பங்குபற்றி பல சாதனைகள் படைத்துள்ளனர்.
அதே நேரத்தில் கல்வி அபிவிருத்தியிலும் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. 

2007ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளுக்கு முன்னர் இப்பாடசாலையில் கணனி கூடம், வேன்ட் வாத்தியம், விஞ்ஞான ஆய்வுகூடம், ஒலி-ஒளி சாதனக் கூடம் என்பன அமைந்திருந்தன.

ஆனால் இடம் பெயர்வுக்கு பின்னால் அவை அனைத்தும் இழக்கப்பட்ட பாடசாலையாக இது மாறிவிட்டது. இருந்தும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டு இழந்த பௌதீக வளங்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


பாடசாலைக் கீதம்




அரசடித்தீவினில் அமைந்திடும் வித்தி

ஆலயமே கலை ஆலயமே



ஆயிரம்மாயிரம் ஆண்டுகளாக

அருள்மொழியும் தான் தோன்றி

ஈஸ்வரன் கருணை எமக்கிருப்பதனால்
எழுவோம் முயல்வோம் வாழ்வோம்

இறைவனின் திருவடி துதிப்போம்

எமையீன்றதாய் தந்தையை மதிப்போம்.

அறிவே குரு என நினைப்போம்
அகிலம் போற்ற வாழ்வோம்
அரசடித்தீவினில்…………

தாய் மொழியாந் தமிழ்தேன்மொழியோடு
தரணி மொழி ஆங்கிலமும்

வாழ்வினைப் பெருக்கும் கமத் தொழிலோடு
வளம்தரும் கைத்தொழில் பயில்வோம்

மாண்புறு கலை விஞ்ஞானம்-அது
மதியபுதிய விஞ்ஞானம்

ஓங்கிய கணிதமும் படிப்போம்
ஆரசடித்தீவினில்………..