வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அரசடித்தீவு ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய அலங்கார உற்சவம் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)


அரசடித்தீவு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவமானது 2012-09-17 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று தினங்களாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ் உற்சவத்தின் இறுதி நாளான 2012-09-19ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு

ஸ்நபனாபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விரதம் எமது கிராம மக்களினால் மிகவும் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. அன்றைய நாள் இரவுத் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது.

2012.09.20 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுற்று அன்று மாலை 6.00 மணிக்கு வைரவர் பூசையும் நடைபெற்றது.

இதில் சிறப்பம்சமாக திருவிழாக் காலங்களில் எமது கிராம மக்கள் மட்டுமன்றி கிராமத்தை அண்மித்த பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(இறுதி நாள் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக