சனி, 8 டிசம்பர், 2012

கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்தில் பிரியாவிடை நிகழ்வு

கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்தில் சேவையில் இருந்து ஓய்வு பெறும் சேவையாளர்களை கொளரவிக்கும் முகமாக  08.12.2012 ம் திகதி மு.ப 11.00 மணியளவில் கொக்கட்டிச்சோலை கமநல அமைப்பு தலைவர் திரு..நவரெத்தினராஜா அவர்களின் தலைமையில்  இந் நிகழ்வு நடை

பெற்றது மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் அமைப்பு தலைவர்கள்வட்டை செயலாளர்கள்,
விவசாயிகள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்எமது பிரதேசத்திற்காகவும், பிரதேச விவசாயிகளுக்காகவும் 35 வருடங்களாக பல வழிகளில் முன்னின்று உழைத்த பாராட்டுக்குரிய கொக்கட்டிச்சோலை கமநல  கேந்திர நிலைய பிரதம லிகிதர் திரு.S. மாமாங்கம் (தங்கவேல்) , மதிப்பிற்குரிய  DR .S.ருசாந்தன் SLAS  (உதவி ஆணையாளர் மட்டக்களப்பு)  மேலும் பலவருட காலமாக சிற்றூழியராக கடமையாற்றிய திரு. S. கந்தசாமி ஐயா ஆகியோரையும்  மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும்  கெளரவித்தனர். அத்தோடு பெரும்பாக உத்தியோகிஸ்தர்  MIM. பாயிஸ் MBA LONDAN( கமநல  கேந்திர  நிலையம் கொக்கட்டிச்சோலைஅவர்களும் மலர் மாலை அணிவித்து  கௌரவிக்கப்பட்டார். மேலும் ஓய்வு பெறும்சேவையாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக