வெள்ளி, 18 ஜனவரி, 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆண்டு ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் திரு.வீ.கோபாலபிள்ளை அவர்களின் தலைமையில் 18.01.2013 வெள்ளி அன்று குதூகலமாக நடந்தேறியது. இதில் இரண்டாம் தர மாணவர்கள் முதலாம் தர மாணவர்களுக்கு
மலர் மாலை அணிவித்து இன்முகம் கொண்டு வரவேற்றார்கள். முதலாவது நிகழ்வாக செல்வி.செ.துவாரகா அவர்களினால் இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து மங்கள விழக்கேற்றல் ஏற்றப்பட்டது. இதில் முதலாவது சுடரினை வித்தியாலய அதிபர் ஏற்றி வைக்க இரண்டாவது சுடரினை வித்தியாலய சிரேஸ்ட மாணவதலைவர் செல்வன் தி.சிந்துஜன் அவர்களால் ஏற்றப்பட்டது. மூன்றாவது சுடரினை பெற்றோர் சார்பாக பொ.கோகிலா அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக