வியாழன், 21 மார்ச், 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு சிறந்த அதிபரை நியமிக்கக் கோரி அமைதி ஆர்ப்பாட்டம்


மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரியும் திரு.வீ.கோபாலபிள்ளை  அவர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அரசடித்தீவு  விக்னேஸ்வரா ஆலய பரிபாலன சபை, விக்னேஸ்வரா பழைய மாணவர் சங்கம், விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம், அரசடித்தீவு,
அரசடித்தீவு வடக்கு கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விக்னேஸ்வரா அறநெறி பாடசாலை, விக்னேஸ்வரா இளைஞர் கழகம், இளங்கதிர் கலா மன்றம் போன்ற அரசடித்தீவை சேர்ந்த பதிநான்கு பொதுநலன் சார் அமைப்புக்கள் இணைந்து 21.03.2013 வியாழன் அன்று மு.ப 8.30 மணியளவில் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது பிரதேச செயலாளரின் அழைப்புக்கு இணங்கி  பட்டிப்பளை பொலிஸ் அதிகாரிகள், கொக்கட்டிச்சேலை இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்புடன் அரசடித்தீவு மாரியம்மன் வீதியூடாக அதிபரை இடமாற்றக்கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு  பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு     மு.ப 9.30 மணியளவில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. S.சசிகுமார் அவகளிடம் அமைப்புக்கள் சார்பாக முன்னாள் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.க. கிருபானந்தசிவம் அவர்களினால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக