திங்கள், 15 ஏப்ரல், 2013

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக் கழகத்தின் சிறப்பு விளையாட்டு போட்டி-2013


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக் கழகத்தினால்   14.04.2013  ஞாயிற்றுக்கிழமை 2.00 மணியளவில் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு விளையாட்டு போட்டிகள்
நடைபெற்றன. இந் நிகழ்வானது திரு.சி.செந்தில்குமார்
நாகர் விளையாட்டு கழக தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் தாரா நடை, பலூன் ஊதி உடைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், பெண்களுக்கான சமநிலை ஓட்டம், கால் கட்டி ஓட்டம், பெண்களுக்கானதும் ஆண்களுக்கானதும் வேகநடை, கண்கட்டி ஐஸ்கிறீம் சாப்பிடுதல், தியேட்டறில் படம் பார்த்தல் போன்ற பல புதுமையான விளையாட்டுக்கள் சிறப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இந் நிகழ்வில் நாகர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சிறுவர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் போட்டிகளில் கலந்துகொண்டு  வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக