திங்கள், 15 ஏப்ரல், 2013

பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி நாளை ஆரம்பம்


பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி நாளை அதாவது 17.04.2013 புதன்கிழமை மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணிக்கு  பட்டிப்பளை  இளைஞர்  சேவை அதிகாரி  திரு.அ. தயாசீலன் அவர்களின்  தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

01. 2013ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து இளைஞர் கழகங்களும் பங்குபற்ற முடியும். வயது 13-29 உட்பட்டதாக இருக்க வேண்டும்.

02. சுவட்டு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் 
  I. 13-19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் (ஆண், பெண்)
 II.  20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கும் (ஆண், பெண்)

03.குழு போட்டிகளுக்கான பெயர் படிவத்தினையும், சுவட்டு விளையாட்டுக்கான பெயர் படிவத்தினையும் 2013.04.16ம் திகதிக்கு முன் இளைஞர் சேவை உத்தியோகத்தரிடம் அல்லது பிரதேச சம்மேளன தலைவரிடம் ஒப்படைக்கவும்.

04. மேற்படி அனைத்து விளையாட்டுக்களும் காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்பதால் தங்கள் கழகங்கள் அனைத்தும் உரிய நேரத்திற்கு சமூகம் தரவும்.
       விளையாட்டு போட்டி அட்டவணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக