வியாழன், 4 ஏப்ரல், 2013

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்  பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது.நேற்று மாலை கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப் பட்டதாக  பரீட்சைத்  திணைக்களம்
 அறிவித்துள்ளது.  இம்முறை பரீட்சைக்கு  சுமார்
மூன்று லட்சம் மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர்.இலங்கை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணைய தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

1.   உங்களது பெறுபேற்றினைத் தெரிந்து கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக.

வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும்.

2.   இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

1911- 24 மணிநேரசேவை
011-2784208, 011-2784537, 011-3140314, 011-3188350
தொலைநகல்: 011 2784422
மின்னஞ்சல்: exams@doenets

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக