புதன், 1 மே, 2013

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பட்டிப்பளை கிளை நிருவாக சபைக்கூட்டம் – 2013


(shathish)இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பட்டிப்பளை கிளை நிருவாக சபைக்கூட்டமானது 28.04.2013ம் திகதி பிற்பகல் 4.00 மணியளவில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் பட்டிப்பளைக் கிளையின் தலைவர் சி.கங்காதரன் அவர்களின் தலைமையில்
இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் பட்டிப்பளைக் கிளையின் நிருவாக உறுப்பினர்களும் 1ம், 2ம், 3ம் அலகு தலைவர்இ செயலாளர்இ பொருளாளர் மற்றும் இளைஞர் பிரிவு மாவட்டக் கிளையின் தலைவர் துஷாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் 18.05.2013ம் திகதி மாவட்டக் கிளை தேர்தல் நடைபெற இருப்பதனால் எமது பிரதேசத்தில் இருந்து ஆறு பேர் தவறாது கலந்து கொள்ள வேண்டும். எனவும் கிராமிய துரித போசாக்கு மேம்பாட்டுத் திட்டம். (PD HARTH) கிராமங்களில் வேள்ட் விஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட இருக்கிறதுஇ எனவும் இரத்த தானம் எதிர்வரும் 18.05.2013ம் திகதி நடைபெற இருக்கின்றது. எனவும் நிதி சேகரிப்பு செய்தல் சம்பந்தமாகவும் ஒவ்வொரு மாதமும் சிரமதானம்இ கூட்டம் போடுவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக