வெள்ளி, 28 ஜூன், 2013

அரசடித்தீவு வலைப்பூவின் ஒரு வருடநிறைவை இட்டு சி. பார்த்தீபன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

எம் மண்ணில் இருந்தவாறே உலகுக்கு சேதிசொல்லும் வலைப்பூ! உண்மையோடு  எம் ஊரின் தடயங்களையும், பிரதேச செய்திகளையும் பிரமிப்பூட்டிய உண்மையோடு உரைப்பதையிட்டு உளமகிழ்கிறேன். செய்தி வழங்குவது மட்டுமன்றி தடயத்தின் சுவடுகளை ஆவணமாய் சேமிப்பதிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது என்பது பெரிதும் வரவேற்கப்படுகிறது. எம் கிராமத்தினதும் பிரதேசத்தினதும் ஆவணங்கள் சேமிக்கப்படுவது குறைவு. இன்று ஆதாரங்கள் உன்னால் ஆவணமாக்கப்பட, நீயும் ஓர் முன் உதாரணமே!.  செய்தி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் பல உணர்வுகளின் உறவுப்பாலமாகவும் செயல்படவேண்டும். பலர் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஊக்கமானோர் எம் உறவை உயர்த்த வேண்டும். வளரும் பலர் வானத்தை தொடவேண்டும். இவை அனைத்தும் எம் மண்ணின் சிகரங்கள்.என உலகத்தின் எச்சங்கள் உரத்துச்சொல்ல வேண்டும்.

வாழ்க, வளர்க, வளர்க்குக.

என்றும் மகிழ்ச்சி வாழ்த்துடன்
சிந்தாத்துரை பார்த்தீபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக