திங்கள், 15 ஜூலை, 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய 2009 O/L மாணவர்களால் அன்னதானப் பணி

(சகி) மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2009ம் ஆண்டு கல்வி பொதுத் சாதாரணதரத்திலும் மற்றும் 2012 உயர் தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களால் அன்னதான பணி ஒன்று 14.07.2013 ஞாயிற்றுக்கிழமை
மதியம் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வினை நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்போடு நடைபெற்றது. மேலும் ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு   பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்த அடியார்கள் இவ் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக