வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இன்று அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை

இன்று (2013.08.02) அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் தவணை பரீட்சைகள் முடிவுற்ற நிலையில் பெறுபேற்று சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்படுகின்றன. அடுத்த மூன்றாம் தவணை ஆரம்பம் 2013.09.02 திகதி என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பட்டிப்பளை
கோட்ட பாடசாலைகளில் விடுமுறை காலங்களிலும் இம்முறை க.பொ.த சாஃதர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு விசேட வகுப்புக்களும் இடம்பெறுவதற்கான நேரசூசிகளும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டுள்ளன. இம்மாதம் 05 ஆம் திகதியில் இருந்து க.பொ.உஃதர பரீட்சை இடம்பெறவுள்ளமையினால் அதற்கான முன்னாயத்த வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பாடசாலைகளில் இடம்பெற இருந்த விசேட வகுப்புக்கள் அவ்வவ் கிராமங்களில் அமையப்பெற்றுள்ள பொது கட்டிடங்களில் இடம்பெறவுள்ளன. இதேவேளை தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் இம்மாதம் 25 ஆம் திகதி பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக