ஞாயிறு, 25 நவம்பர், 2012

அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பிற்கான சிரமதானப் பணி

இன்று 25.11.2012 ஞாயிற்றுக்கிழமை, அரசடித்தீவு கிராம சேவையாளர் திருமதி ச.குகானந்தன் தலைமையில் கிராம அமைப்புக்களின் உதவியுடன் கிராம மக்களால் மாபெரும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. அதன்மூலம் கிராமத்தில் நுளம்புகள் உருவாகும் ஏது நிலைகள் அழிக்கப்பட்டன. அத்துடன்
விக்னேஸ்வரர் ஆலயம், விக்னேஸ்வரா மகாவித்தியாலயம், விக்னேஸ்வரா பாலர் பாடசாலை, வாசிகசாலை, ஆயுள்வேத மருந்தகம், அஞ்சல் அலுவலகம், பொது சுகாதார நிலையம், இந்து சமய வளர்ச்சி மன்றம், கிராம சேவையாளர் அலுவலகம், பாடசாலை வீதியோர வடிகான் என்பன துப்பரவு செய்யப்பட்டன. இப் பணிகளை மேற்கொள்ளும் போது பெய்த மழையையும் பொருட்படுத்தாது கிராம மக்கள் அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபட்டு நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.



































1 கருத்து: