சனி, 2 பிப்ரவரி, 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் -2013

மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 2013.02.05 செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு பாலர் பாடசாலை மண்டபத்தில் செல்வன்.சி.பார்தீபன் (பாலர் பாடசாலை நிருவாகத் தலைவர்) தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் கடந்த கூட்டறிக்கை சமர்பித்தல், நிருவாக மீழ் நிரப்புதல், புதிய ஆண்டின் நிகழ்ச்சி நிரல் தயாரித்தல், மாணவர்களின் நலன்சார் கலந்துரையாடல்கள்
என்பன இடம்பெறவுள்ளதால் பாலர்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகளையும் கருத்துரைகளையும் வழங்கி பாலர் பாடசாலை வளர்ச்சியை மென்மேலும் வளர்ச்சிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் பாடசாலை நிருவாகத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக