சனி, 16 மார்ச், 2013

பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மகளிர் தின ஊர்வலம்


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 14.03.2013 வியாழனன்று பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட   ஊர்வலமானது பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மகளிர் அமைப்புக்கள், மாதர் சங்கங்கள், பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
 கோசங்களை எழுப்பி பட்டிப்பளை ஊடாக கொக்கட்டிச்சோலை இந்து கலாசாரா நிலையத்தினை சென்றடைந்தது.
      தொடர்ந்து கொக்கட்டிச்சோலை இந்து கலாசார மண்டபத்தில் மாபெரும் ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களால் மங்கள விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. தொடந்து பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துரைகள் இடம்பெற்றன. மேலும் பாடசாலை மாணவர்களால் விவாதம், பேச்சு, கவிதை என பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.        




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக