ஞாயிறு, 5 மே, 2013

இளைஞர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2013


நாடுபூராகவும் 333 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கடந்த 04.05.2013ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை பிரதேச செயலகங்களில்  வாக்களிப்பு இடம்பெற்றது. இதன் போது மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவில்
இருந்து ஒரு உறுப்பினரை தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். இத்தேர்தலில் இளைஞர் யுவதிகள் மிகவும் உற்சாகத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

  இத் தேர்தல் களமிறங்கிய அரசடித்தீவு விக்னேஸ்வரா இளைஞர் கழகசெயலாளரும், பட்டிப்பளை பிரதேச இளைஞர் சம்மேளன தலைவருமான மகேந்திரராசா சந்திரகுமார் 76 மேலதிக வாக்குகளால் அமோக வெற்றிபெற்று பட்டிப்பளை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக