செவ்வாய், 18 ஜூன், 2013

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு


மட்டக்களப்பு அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா அரசடித்தீவு விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்ற தலைவர் திரு.சி.ருசகுமார் அவர்களின் தலைமையில் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், சர்வபோதகம் சிவாஷாரி கதாவாரி முத்தமிழரசி சிவயோகச் செல்வன்.த.சாம்பசிவம் சிவாச்சாரியார், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ வ.சோதிலிங்கம் குருக்கள்,  அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ கி. திருமேனிப்பிள்ளை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி செல்வமலர் சிவலிங்கம், பட்டிப்பளை கலாசார உத்தியோகத்தர் செல்வி ந. வளர்மதி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ம.சந்திரகுமார், பட்டிப்பள பிரதேச பாடசாலை அதிபர்கள், அரசடித்தீவு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


    அம்மனின் பக்திப் பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களை தயாரித்த த.கோகுலரமணன், பாடலாசிரியர்கள் கிராமிய கலைச்சுடர் கவிஞர் செ.முருகுப்பிள்ளை, அரசையூர் மேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களால்  பொன்னாடை போர்த்தி, பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
    இந்நிகழ்வில் விக்னேஸ்வரா அறநெறி பாடசாலை மாணவர்களின் நடனமும் இடம்பெற்றது.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக