அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் முக்கிய விழாவான அம்மன் வீதி ஊர்வலம் நடைபெறுவது மேலும் சிறப்பாகும். 3ம் நாள் உச்சிகாலப் பூசையினை தொடர்ந்து இந்த ஊர்வலம் ஆரம்பமாகும். இந் நிகழ்வின்போது மக்களுக்கு அம்மனின் தரிசனம் நேரடியாக அருள் கொடுக்கும்
நிகழ்வாக இந் நிகழ்வு இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இதில் மேலும் நோயின் நிமிர்த்தம் ஆலயத்திற்கு வரமுடியாத அன்பர்களுக்கு அவர்களின் இல்லத்தின் வெளி வீதியில் அவர்களின் குறைகள் தீர்க்கப்படுவது மிகவும் சிறப்பன ஒரு நிகழ்வாகும். இவ் ஊர்வலமானது அரசடித்தீவு கிராமத்தில் நான்கு நாட்கள் நடைபெறுவது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக