திங்கள், 22 ஜூலை, 2013

ஐந்தாம் தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு - 2013

-ஜித்தன்- பட்டிப்பளை பிரதேச கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு அனைத்து பாடசாலை அதிபர்களினதும் ஒத்தாசையுடன் மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா
மகா வித்தியாலயத்தில் கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலை ஆசிரியரும் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வளவாளர் ஆசிரியர் திரு.த.பேரின்பராசா அவர்களினால் 22-07-2013 திங்கட்கிழமை முழு நாட்கருத்தரங்கு நடைபெற்றது.

 இக் கருத்தரங்கில் மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய பிரதி அதிபர் திரு.செ.வரதராஜன் அவர்களும்  திருமதி.ம.இரத்தினசிங்கம் ஆசிரியர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.   இக் கருத்தரங்கில் பட்டிப்பளை கோட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளில் இருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக