செவ்வாய், 2 ஜூலை, 2013

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் சிரமதானப்பணி

தேன்யோகி
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள கிராமமக்களால் வருடா வருடம் சிரமதானப்பணி செய்துவருவது வழக்கம். இதற்கமைய 2013.06.30 இன்றைய தினம் அரசடித்தீவு கிராம வாழ் மக்களால் மாபெரும்
சிரமதானப்பணி ஒழுங்குசெய்யப்பட்டது. இதில் கிராமத்தைச்சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய சுற்றுப்புறச் சூழலை  சுத்தப்படுத்தினர். இவ் சிரமதானப்பணியில் ஐந்து உழவு இயந்திரங்கள் பங்குபற்றியிருந்தன.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக